தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகளுக்கு தரமற்ற விதைகள் விற்றால் நடவடிக்கை

 

Advertisement

ஓமலூர், மே 30: சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் செல்வமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விதை விற்பனை உரிமம் இன்றி, ஆங்காங்கே தரமற்ற முளைப்பு திறன் கொண்ட விதைகளை விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. தரமான விதைகள் அங்ககச்சான்று துறையின் கீழ் செய்யப்படும், விதை ஆய்வு துணை இயக்குநரால் வழங்கப்படும் விதை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு வேளாண்மை விவாக்க மையங்களில், மானிய விலையில் விதைகள் வாங்கி பயனடையலாம். விதை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் விதைகள், பயிர் ரகம், குவியல் எண், முளைப்புத்திறன் சதவீதம், இனத்தூய்மை, புறத்தூய்மை சதவீதம், காலாவதி நாள், தகுந்த பருவம் போன்றவை அலுவலக மாதிரியாக எடுக்கப்பெறுகிறது.

மேலும், விதைப்பரிசோதனை நிலையத்தில் அனுப்பப்பட்டு தரமற்றது எனில், விதை விற்பனையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் வெளிச்சந்தை மற்றும் விதை உரிமம் இல்லாதவர்களிடம், விதைகளை வாங்கி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏதாவது இருந்தால், கலெக்டர் அலுவலக விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News