தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலைகள், குடியிருப்பு நிறைந்த பகுதியில் அபாயகர மரங்களை அகற்ற நடவடிக்கை

ஊட்டி, மே 30: நீலகிரி மாவட்டத்தில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் அபாயகர மரங்களை படிப்படியாக வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் துவங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழையும் பெய்கின்றன.

Advertisement

இந்த இரு முக்கிய பருவமழைகளை நம்பியே விவசாயம், குடிநீர் தேவைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. பருவமழை சமயங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு, குடியிருப்புகளின் மீது மரங்கள் விழுதல் போன்ற பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக சாலைகள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி காணப்படும் ராட்சத கற்பூர மரங்கள், சீகை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுகின்றன. மேலும் வாகனங்கள் மீதும், குடியிருப்புகள் மீதும் விழுந்து பொருட்சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் பழமை வாய்ந்த கற்பூர மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் பருவமழையின்போது மரம் விழுந்து பலர் பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் பள்ளிகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் அபாயகர மரங்கள் அதிகளவு உள்ளன.

இந்தாண்டுக்கான முன்கூட்டியே துவங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த ஞாயிறன்று ஊட்டியில் மரம் விழுந்து சுற்றுலா வந்த கேரள சிறுவன் உயிரிழந்தான். கடந்த 6 நாட்களில் சுமார் 130க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் விழுந்தன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டாலும், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அபாயகர மரங்களை வெட்டி அகற்றிட என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனிடையே அபாயகர மரங்கள் படிப்படியாக அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாலையோரங்களில் உள்ள அபாயகர மரங்கள் கணக்ெகடுக்கப்பட்டு வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

இவற்றில் சில ராட்சத மரங்கள் சாலையில் இருந்து பல அடி வனத்திற்குள் உள்ளது. இவை பலத்த காற்று காரணமாக பல அடி நீளமுள்ள இவை விழும்போது சாலையில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை ஒட்டுமொத்தமாக அகற்றுவதில் சிரமம் உள்ளது. இருப்பினும் அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Advertisement

Related News