தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் மேலும் 4 பேருக்கு வலை 2 நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை

புதுச்சேரி, ஜூன் 20: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவர் தனக்கு கிடைத்த பென்ஷன் பணத்தை கிரிப்டோ கரன்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி, இணையத்தில் வந்த ஆஷ்பே என்ற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி அதில் ரூ.93 லட்சம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்தார். இதேபோல், தொடர்ந்து, 8 பேர் ஆஷ்பே கம்பெனியில் முதலீடு செய்து மொத்தமாக ரூ.2.5 கோடி பணத்தை இழந்ததாக புகார் அளித்தனர். அதன்பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், போலி கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் இயக்குனர்களான பாபு (எ) சையது உஸ்மான், இம்ரான் பாட்ஷா, நித்தீஷ் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40), தாமோதரன் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

ேமலும் அவர்களிடமிருந்து சொகுசு கார், பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான பாபு (எ) சையது உஸ்மான், இம்ரான் பாட்ஷா ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, இவ்வழக்கில் மேலும் 4 பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆஷ்பே நிறுவன விழாவில் கலந்து கொண்ட பிரபல நடிகைகள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Advertisement

Related News