தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை தேவை

 

Advertisement

க.பரமத்தி, மே 31: கரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர், கடைகள், கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கிராம புறங்களில் உள்ள சந்தைகள் போன்ற பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் அபராதம் விதிக்கப்படுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. கரூர் மாவட்டத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட சில நாட்கள் மட்டுமே சிகரெட் பிடிப்பதற்கு புகைப்பவர்கள் பயந்தனர். காலப்போக்கில் இச்சட்டம் குறித்து யாரும் கண்டு கொள்ளாததால் மீண்டும் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட், புகையிலை பொருட்கள் வினியோகிப்பது தவறு என சட்டம் உள்ளது. ஆனால் சிறியவர்களுக்கும் சிகரெட், புகையிலை போன்ற பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே முதலில் கடைகாரர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் என்ற சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றார். சுகாதாரத்துறையை சேர்ந்த பெயர் விரும்பாத ஒரு அதிகாரி கூறுகையில், சிகரெட் பிடிப்பது குற்றம் என்று பொது இடங்கள், கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை தடுக்க பொதுமக்களும் முன் வர வேண்டும் என்றார்.

Advertisement

Related News