தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதால் விபத்து: காரைக்குடியில் விழிப்புணர்வு பிரசாரம்

 

Advertisement

காரைக்குடி, அக்.8: சாலைகளில் தேங்காய், பூசணிக்காய் உடைப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி மதுரையை சேர்ந்தவர், காரைக்குடியில் பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மதுரை வலசேரிப்பட்டியை சேர்ந்த சரவணன் கைகளில், பூசணிக்காய் மற்றும் தேங்காய் வைத்துக் கொண்டு நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பஸ் ஸ்டாண்டில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் சாலைகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் கண் திருஷ்டி என கூறி பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைப்பதால் விபத்துகள் ஏற்படுவது குறித்து விழிப்புணர்பு பிரசாரம் மேற்கொண்டார்.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், கண் திருஷ்டி என கூறி பண்டிகை மற்றும் வார நாட்களில் சாலைகள், தெரு சந்திப்புகளில் தேங்காய், பூசணிக்காய் உடைக்கும் பழக்கம் நீண்ட காலமாக உள்ளது. தற்போது வர உள்ள ஆயுத பூஜைக்கு அதிகளவில் இதுபோன்று சாலைகளில் உடைப்பார்கள் இதனை தவிர்க்க வலியுறுத்தியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

Advertisement