தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் அருகே விபத்து அபாயம் நொய்யல் ஆற்றுப்பாலத்தில் சுவிட்ச் பாக்ஸ் சேதமானது

 

Advertisement

திருப்பூர், மே 28: திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தில் மின்இணைப்பு பெட்டி ஆபத்தான முறையில் திறந்து கிடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

திருப்பூர் மாநகரில் சுமார் 13 கி.மீட்டர் தூரத்திற்கு நொய்யல் ஆறு பாய்கிறது. நொய்யல் ஆற்றின் குறுக்கே பல்வேறு பகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இவை திருப்பூர் மாநகரின் மிக முக்கிய போக்குவரத்து பாதைகளாக இருந்து வருகிறது. இவற்றில் வளர்மதி பாலம் மிகவும் முக்கியமானதாகவும், பழமை வாய்ந்ததாகவும் உள்ளது.

வளர்மதி பாலம் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய பகுதியாகும். மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த பாலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வண்ண ஒளி விளக்குகள், நடைமேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நடைமேடையில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் திருப்பூருக்கு புதியதாக வருகை தருபவர்கள் நின்று நொய்யல் ஆற்றை பார்த்து ரசிப்பது, படம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், வண்ண ஒளி விளக்குகளுக்காக பலத்தின் நடைபாதை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி (ஸ்விட்ச் பாக்சின்) உடைக்கப்பட்டு திறந்தவெளியில் உள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் சென்று வரும் நடைப்பாதையில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் இணைப்பு பெட்டி (ஸ்விட்ச் பாக்ஸ்) மூலம் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஸ்விட்ச் பாக்ஸ் சீரமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement