தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிரி புனித நீரால் கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

பெரம்பலூர், ஆக. 4: ஆடிப் பெருக்கையொட்டி, திருச்சி காவிரி அம்மா மண்டபத்திலிருந்து 60 கி.மீ., தூரம் தலைக் காவிரி நீரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தலையில் சுமந்து வந்து, பெரம்பலூர் கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். பெரம்பலூர் நகரத்தில் பஞ்சபாண்டவர் வழிபட்ட தலமாகக் கருதப்படும், மரகதவள்ளி தாயார் சமேத மதனகோபால சாமி கோயிலில் 40 அடி உயரமுள்ள கல்தூணில் கலைநடத்துடன் கம்பத்து ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பெரம்பலூர் இளைஞர்கள் நூறுபேர், கடந்த 2ம் தேதி இரவு 10 மணியளவில் திருச்சி அம்மா மண்டபம் காவிரியிலிருந்து குடங்களில் புனித நீரை நிரப்பி, காவிரித் தாய்க்கு படையலிட்டனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நடைபயணமாக திருச்சிமாவட்டம், எதுமலை; பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம், சத்திரமனை வழியாக, மாலை 4 மணிக்கு சிறுவாச்சூருக்கு வந்தனர். அங்கு, இளைப்பாரிவிட்டு, பின்னர் புறப்பட்டு பெரம்பலூர் தெற்கே உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் அருகே வரும்போது, தண்ணீர் சுமந்து வருவோரை, முக்கியஸ்தர்கள், உறவினர்கள் மேள தளங்களுடன் வரவேற்று, பெரிய தெற்கு தெரு, கடைவீதி, சஞ்சீவி ராயன் கோவில் தெரு வழியாக, பெருமாள் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர், மாலை 6 மணியளவில் அங்குள்ள கம்பத்து ஆஞ்ச நேயருக்கு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்வு, பாரம்பரியமாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News