தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ்

 

 

கோபி, ஜூலை 1: கோபியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பவானி அருகே உள்ள பெருமாம்பாளையம் ஆண்டிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பன் மனைவி கமலம்(76). இவர் கடந்த 16ம் தேதி கோபி பேருந்து நிலையத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். பேருந்தில் கூட்டமாக இருக்கவே, மார்க்கெட்டில் இறங்காமல் கரட்டடிபாளையம் சென்று பேருந்தில் இருந்து இறங்கி உள்ளார்.

கரட்டடிபாளையத்தில் இறங்கிய போது, அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகை காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது அருகே நின்ற பெண் ஒருவர் நகையை திருடி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கமலம் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News