தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமணமான 10 மாதத்தில்புதுப்பெண் விஷம்

குடித்து தற்கொலை நெல்லை,ஜூன் 16: கோவை மாவட்டம் கருமத்தம்பாளையம் குமரன்நகரைச் சேர்ந்த பலவேசம் மகள் கிருத்திகா (21). இவருக்கும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வைராவிகுளம் நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இருவரும் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

இதனால் மனவேதனையில் இருந்த கிருத்திகா கடந்த 11ம் தேதி வீட்டில் வயலுக்குப் பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லியை குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கிருத்திகாவை உடனடியாக மீட்டு கல்லிடைக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் கிருத்திகா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருத்திகாவின் தந்தை பலவேசம் அளித்த புகாரின் பேரில் மணிமுத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் மேலும் இது தொடர்பாக சப்கலெக்டர் (பொ) சிவகாமசுந்தரி விசாரணை மேற்கொள்கிறார்.