தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடிபோதை தகராறு தட்டிக்கேட்ட விவசாயி அடித்துக்கொலை வாலிபர் அதிரடி கைது தண்டராம்பட்டு அருகே பயங்கரம்

 

Advertisement

தண்டராம்பட்டு, பிப்.2: தண்டராம்பட்டு அருகே குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் கட்டையால் அடித்து விவசாயியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த புதூர் செக்கடி ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்பு ஓடை பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (36). கடந்த 28ம் தேதி குடித்துவிட்டு அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளிடமும், நடந்து செல்பவர்களிடமும் வீண் தகராறு செய்து கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாள்(38), ராமராஜிடம் ஏன் இப்படி குடித்துவிட்டு தகராறு செய்கிறாய்? என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், தகராறு முற்றியதில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதில், படுகாயம் அடைந்த பெருமாளை அப்பகுதியினர் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருமாள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள் மகன் மணிகண்டன் தானிப்பாடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் கொலை வழக்குப்பதிவு செய்து ராமராஜை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தார். குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement