தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செஞ்சி அருகே கடைக்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்

 

Advertisement

செஞ்சி, மார்ச் 19: செஞ்சி அருகே கடைக்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காட்டு சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கீழ்பென்னாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6.1.2025 அன்று சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் வீட்டுக்கு திரும்பியபோது கடைக்கு சென்றாராம். அப்போது அரசு பள்ளி அருகே நின்றிருந்த அதே ஊரை சேர்ந்த சரவணன் மகன் வினித்குமார் (23) என்பவர் திடீரென சிறுமி வாயில் துணியை அடைத்து பள்ளியின் கழிவறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதமாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வினித்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement