தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1.94 லட்சம் அபேஸ் குடியாத்தம் அருகே துணிகரம் சிகிச்சைக்காக நகையை விற்று எடுத்துச்சென்றார்

குடியாத்தம், ஜூலை 6: குடியாத்தம் அருகே நகைகளை விற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பஸ்சில் சென்ற பெண்ணிடம் ரூ.1.94 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் பிரித்திவிராஜ், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி வினோதினி. இவர் நேற்று முன்தினம் குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்று தனது நகைகளை விற்றுள்ளார். அதன்மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு குடியாத்தம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காட்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாராம். குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது தனது பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது பையில் வைத்திருந்த ரூ.1.94 லட்சம் திருட்டுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். மர்ம ஆசாமிகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இந்த துணிகர திருட்டு குறித்து வினோதினி குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1.94 லட்சம் அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Related News