தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாராந்திர சிறப்பு குறைதீர்வு கூட்டம் எஸ்பி சுதாகர் தலைமையில் நடந்தது திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில்

திருவண்ணாமலை, அக்.10: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர்வு கூட்டம் எஸ்பி சுதாகர் தலைமையில் நேற்று நடந்தது. திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமையன்று நடைபெறும் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை எஸ்பி சுதாகர் பெற்று விசாரணை நடத்தினார். அதில், கூடுதல் எஸ்பிக்கள் பழனி, சவுந்தரபாண்டியன் மற்றும் டிஎஸ்பிக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று நடந்த கூட்டத்தில் மொத்தம் 32 புகார் மனுக்கள் பெறப்பட்டன. மனு அளித்தவர்களிடம் எஸ்பி சுதாகர் தனித்தனியே புகார்களை கேட்டறிந்தார். மேலும், ஒவ்வொரு மனுவையும் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்து ஒப்புகை ரசீது வழங்கவும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து முழுமையாக தீர்வு காணவும் எஸ்பி உத்தரவிட்டார்.

Advertisement

இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் நில பாகப்பிரிவினை செய்த பிறகும் அதை பயன்படுத்த முடியாமல் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார். அதேபோல், செய்யாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக மனு அளித்தார். அதன் மீது மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார்.

Advertisement