தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சி - ஏனாத்தூர் சாலை கோனேரிக்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் மீது கன்டெய்னர் லாரி மோதி பயங்கர விபத்து: ஒரு மணி நேரம் ரயில் தாமதம்

காஞ்சிபுரம், டிச. 5: காஞ்சிபுரம் - ஏனாத்தூர் சாலை கோனேரிக்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால், அப்பகுதி வாகன ஓட்டிகளும், பயணிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். காஞ்சிபுரத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று ஏனாத்தூர் வழியாக ரயில்வே கேட்டை கடக்கும்போது திடீரென லாரி ரயில் கேட் மீது உரசி மோதியதால் ரயில் கேட் இரும்பு தடுப்பு பைப் வானத்தை நோக்கி மேலே தூக்கி நின்றது.

Advertisement

அப்போது, ரயில் தண்டவாளத்தின் மேலே செல்லும் 25 ஆயிரம் ஓல்ட் மின்சார ஒயர் மீது உரசியதில் திடீரென தீப்பிழம்பும் தீப்பொறியும் ஏற்பட்டது. இதனால், அங்கிருந்தவர்கள் அலறி திகைத்து நின்றனர்.

அதைத்தொடர்ந்து, ரயில் கேட் மூட முடியாததால் ஏராளமாக வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. உடனே அங்கிருந்து கேட் ஊழியர் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி ரயில் கேட்டை சரி செய்தனர். இதனால், 8.15 மணிக்கு கடக்க வேண்டிய திருமால்பூர் சென்னை பீச் செல்லும் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 9.15 புறப்பட்டு சென்றது. இதனால், ரயில் பயணிகளும் ரயில்வே கேட்டை கடக்க நின்ற பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து ஏனாத்தூர் செல்லும் ரயில்வே கேட் பகுதியில் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி நின்றன. இதனால், காஞ்சிபுரம் - ஏனாத்தூர் கோனேரிக்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டது. மேலும், ரயில்வே கேட்டை இடித்த லாரி டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்லும் ஏராளமான ரயில் பயணிகள் ஒரு மணி நேரம் தாமதமானதால் பலர் பாதியிலேயே வீடு திரும்பினார்கள். சிலர் டிக்கெட் கவுண்டரில் கொடுத்து பணத்தை திருப்பி வாங்கிக் கொண்டு சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News