தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியாத்தம் அருகே கோயிலுக்கு சென்ற பெண்ணை கடித்து குதறிய தெருநாய்

குடியாத்தம், ஜூன் 18: குடியாத்தம் அருகே தெருநாய் கடித்து குதறியதால் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி கும்பிடுவதற்காக அதே பகுதியை சேர்ந்த கல்பனா(40) என்பவர் நேற்று சென்றுள்ளார். அப்போது, கோயில் வளாகத்தில் படுத்துக் கொண்டிருந்த நாய் திடீரென கல்பனாவை பார்த்து குரைத்துள்ளது. அவர் விரட்ட முயன்றபோது நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே அருகில் வந்தது.

Advertisement

இதனால் அதிர்ச்சியடைந்த கல்பனா கூச்சலிட்டபடி அலறியடித்து கொண்டு ஓடினார். ஆனால், விடாமல் விரட்டி சென்ற தெருநாய் கல்பனாவின் கை, கால் உட்பட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நாயை விரட்டியடித்தனர். பின்னர், நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த கல்பனாவை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement