தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பந்தலூர் அருகே சாலைக்கு சம்பந்தம் இல்லாமல் அமைக்கப்பட்ட சிறு பாலம்

 

Advertisement

பந்தலூர், மே 20: பந்தலூர் அருகே குந்தலாடி தாணிமூலா பகுதியில் சாலைக்கு சம்மந்தம் இல்லாத சிறு பாலத்தால் பயனின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி தானிமூலா பகுதியில் பழங்குடியினர் உட்பட பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குந்தலாடி பஜார் பகுதியில் இருந்து செல்லும் சிமெண்ட் சாலையில் நடந்து சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை சிமெண்ட் சாலை அமைக்கபட்டுள்ளது. அதற்கு பின் சுமார் 300 மீட்டர் தூரம் சாலை போடப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் வயல்வெளியில் சேறும் சகதியுமான நடைபாதையில் நடந்து செல்கின்றனர். பலமுறை ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகத்திற்கு சாலை அமைக்க கேட்டு மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த சாலைக்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இது தற்போது நடந்து செல்லும் சாலைக்கு சம்பந்தம் இல்லாத நிலையே உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாலத்தின் இரு பக்கமும் சாலை ஏதும் அமைக்கப்படவில்லை அதற்கான எந்தவித முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.  இதனால் இந்த பாலம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என தெரியாத நிலையே உள்ளது. இதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு தொடர் சாலை அமைக்க வேண்டும் அல்லது சம்பந்தம் இல்லாத இடத்தில் பயனற்ற நிலையில் பாலம் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement