தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மது வாங்கி கொடுக்காததால் மோதல் கொத்தனார், நண்பரை உருட்டுக்கட்டையால் தாக்கிய ரவுடி அகஸ்தீஸ்வரம் அருகே பரபரப்பு

நாகர்கோவில், மே 25: அகஸ்தீஸ்வரம் அருகே மது பாரில் ஏற்பட்ட முன் விரோதத்தில் கொத்தனார், நண்பரை தாக்கிய ரவுடியை போலீசார் தேடி வருகிறார்கள். அகஸ்தீஸ்வரம் வடுகன்பற்று பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(29). கொத்தனார். கடந்த 22ம்தேதி சதீஷ் மற்றும் அவரது நண்பர்களான அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஆனந்த பாலாஜி, சரவணன் மற்றும் சிலர் சேர்ந்து கன்னியாகுமரி சமாதானபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ரகுபாலன் (26) என்பவர் அங்கு வந்து, ஆனந்த பாலாஜியிடம் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் இல்லை என கூறினார். இதனால் அவரை ரகுபாலன் ஆபாசமாக பேசி தாக்க முயன்றார். இதை சதீஷ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தடுத்து, ரகுபாலனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அகஸ்தீஸ்வரம் சாஸ்தான்கோவில் அருகில் சதீஷ், ஆனந்த பாலாஜி மற்றும் மணி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ரகுபாலன் உருட்டு கட்டையால் சதீஷ் மற்றும் ஆனந்த பாலாஜியை சரமாரியாக தாக்கினார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும், சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. குற்றாலிங்கம் வழக்கு பதிவு செய்து, ரகுபாலனை தேடி வருகிறார். ரகுபாலன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு பட்டியலிலும் அவர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

Advertisement

Related News