தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவிலில் கோதுமை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது

 

Advertisement

நாகர்கோவில், மே 27: நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியில் உள்ள மாவு மில்களுக்கு வட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோதுமை வருவது வழக்கம். நேற்று பஞ்சாபில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திற்கு கோதுமை வந்தது. பின்னர் கோதுமை மூடைகள் நெல்லை மாவட்டம் பணக்குடியில் உள்ள மாவு மில்லிற்கு லாரிகள் மூலம் அனுப்பப் பட்டது.

நேற்று மாலை 6 மணி அளவில் கோதுமை மூடைகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் சுசீந்திரத்திற்கும் இடையே ஆனைபாலம் அருகே ஒரு லாரி சென்றுக்கொண்டு இருந்தது. லாரியில் ஏற்றப்பட்ட மூடைகள் சீராக அடுக்கப்படாததால், லாரியில் இருந்து இடதுபுறமாக மூடைகள் சரிய தொடங்கின.

ஆனைபாலத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் லாரி இறங்கியுள்ளது. அப்போது மேலும் மூடைகள் சரியவே, லாரி நிலையாக செல்ல முடியாமல் இடதுபுறமாக கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் லாரியில் இருந்து கோதுமை மூடைகள் சாலையோரம் சிதறின. சம்பவ இடத்திற்கு நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வேறு லாரிகள் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த லாரியில் இருந்து மூடைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Related News