தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீரிப்பாறையில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை பொதுமக்கள், தொழிலாளர்கள் அச்சம்

 

Advertisement

பூதப்பாண்டி, ஜூன் 27: கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி மலையில் இருந்து இறங்கி அடிவாரத்தில் உள்ள மலைகிராம பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்துகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை மேற்கு மலை தொடர்ச்சியையொட்டி உள்ள கீரிப்பாறை பகுதியில் சுற்றிதிரிந்து வருகிறது. இந்த யானை குடியிருப்புகளில் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதோடு, ரப்பர் பால் வெட்ட செல்லும் தொழிலாளர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனை கண்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானையை தொழிலாளர்கள் விரட்ட முயற்சித்தும், யானை அங்கிருந்து செல்லாமல் நீண்ட நேரம் நின்று கொண்டு போக்கு காட்டியது.

நீண்ட நேரத்துக்கு பிறகு காட்டு யானை குடியிருப்பில் இருந்து வெளியேறி அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Advertisement

Related News