தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு

 

Advertisement

கடலூர், மே 26: சென்னையில் இருந்து இளம்பெண் காரில் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை வேளச்சேரி பகுதியில் இருந்து 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த கார் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் நேற்று கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் மார்க்கமாக வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூரில் அந்த இளம் பெண் தனது தாய் மாமனுடன் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனையை முடித்து கொண்டனர். போலீசாரின் இந்த திடீர் சோதனையால் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement