தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்தான முன்னுதாரணம் அரசு ஆசிரிய தம்பதி மகள் அரசு பள்ளியில் சேர்க்கை நாங்களும் இப்படித்தான் படித்து வந்தோம் என பெருமிதம்

கீழ்வேளூர், ஜூன் 11: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய தம்பதி, தங்களது குழந்தையை வலிவலம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தனர். அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலேயே படிக்க வைத்து வருகின்றனர். அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அரசு பள்ளியில் படிப்பு தரம் உயர வாய்ப்பு உள்ளது என்றும் கருத்துக்கள் நிலவி வருகிறது. இதற்கு முன்னுதாரணமாக நாகை மாவட்டம் திருக்குவளை அருகே கீரம்பேர் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் கீரங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

இவரது மனைவி வேம்பு கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் இவர்களது மகளை வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு சேர்த்துள்ளனர். இவரது சேர்க்கைக்கான ஆணையை பள்ளி தலைமை ஆசிரியர் முரளி வழங்கினார்.இது குறித்து மாணவியின் பெற்றோர்களான ஆசிரியர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளும் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாங்களும் அரசு பள்ளியில் படித்து விட்டு தான் இப்பணிக்கு வந்துள்ளோம். எனவே எங்களது குழந்தையையும் அரசு பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து சேர்த்துள்ளோம். இதுபோல் மற்ற ஆசிரியர்களும் அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்.

Advertisement

Related News