தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒரத்தூர் பகுதியில் முழுநேர அங்காடி திறக்க வேண்டும்

 

நீடாமங்கலம், ஜூலை 10: நீடாமங்கலம் வட்டம் ஒரத்தூர் பகுதிநேர அங்காடியை முழுநேர அங்காடியாக இயங்கிட செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலம் தாலுகா சித்தமல்லிமேல்பாதி ஊராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுவிநியோகத்திட்ட பொருள்கள் விற்பனை செய்யும் அங்காடி சித்தமல்லி மற்றும் ஒரத்தூர் கிராமத்தில் பகுதி நேரமாகவும் இயங்கி வருகிறது.

இதில் சித்தமல்லியில் இயங்கும் அங்காடியில் சித்தமல்லி, மணப்பாலக்குடி, படுகை,லாயம், வெள்ளங்குழி உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த 440 குடும்ப அட்டைதாரர்களும்,ஒரத்தூர் அங்காடியில் ஒரத்தூர், திருவள்ளுவர் நகர்,காமாட்சி நகர்,கீழத்தெரு, அம்பலக்காரத்தெரு பகுதியைச்சேர்ந்த 478 குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறுகின்றனர்.

பகுதிநேர அங்காடி ஒரத்தூர் கிராமத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது.இந்த இரண்டு நாள் என்பது பொருட்களை வாங்க போதுமான நாளாக இல்லை. எனவே ஒரத்தூர் அங்காடியை முழு நேர அங்காடியாக செயல்பட மாவட்ட நிர்வாகம் உத்திரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News