தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் அடுத்த தங்கானூரில் 2 நாட்கள் நடைபெற்ற அனல் பறக்கும் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி: வெற்றி பெற்ற சேவல்களுக்கு பரிசு

 

Advertisement

திருவள்ளூர், ஜன. 29:திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், தங்கானூர் கிராமத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் காவல் துறை கண்காணிப்பில் சேவல் சண்டை போட்டியை நடத்த அனுமதித்தது இதனையடுத்து, தங்கானூர் கிராமத்தில் நேற்று முன்தினம் காலை சேவல் சண்டை போட்டி உற்சாகமாக தொடங்கியது. இந்த சேவல் சண்டை போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேவல் உரிமையாளர்கள் தங்கானூர் கிராமத்தில் குவிந்ததால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டது.

இந்தப் போட்டியில் நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் பங்கேற்க இருந்ததால் 120 சேவல்கள் ஒரே நேரத்தில் களம் காணும் வகையில் களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த சேவல் சண்டை போட்டியில் 3 ஆயிரம் சேவல்கள் கலந்து கொண்டன. அதன்படி புதுச்சேரியைச் சேர்ந்த சின்னத்தம்பியின் 40 சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டதில் 18 சேவல்கள் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.

கடலூர் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் 25 சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டதில் 12 சேவல் வெற்றி பெற்று 2வது பரிசை தட்டிச் சென்றது.  சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த ஜாகீர் என்பவரின் 23 சேவல்களில் 11 சேவல்கள் வெற்றி பெற்று 3 வது பரிசை பெற்றது. இதில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு அரை கிராம் தங்க நாணயமும், சமநிலை அடைந்த சேவல்களுக்கு கேஸ் ஸ்டவ் அடுப்பும் பரிசாக வழங்கப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 2 நாட்கள் நடைபெற்ற சேவல் சண்டை போட்டியை முன்னிட்டு திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி அனுமந்தன் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement

Related News