தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஏரல் -மங்கலக்குறிச்சி ரோட்டில் ஒடிந்து விழுந்த மரக்கிளை

 

ஏரல், ஜூன் 28: ஏரல் - மங்கலக்குறிச்சி மெயின் ரோட்டில் வேப்பமரக்கிளை ஒடிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் மரக்கிளையை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.  ஏரலில் இருந்து மங்கலக்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் வடிகால் மடை அருகே நேற்று காலை 7 மணியளவில் சாலையோரத்தில் இருந்த வேப்ப மரக்கிளை ஒடிந்து ரோட்டில் விழுந்தது.

இதனால் இவ்வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஏரலில் இருந்து மங்கலக்குறிச்சி வழியாக நெல்லைக்கு செல்லும் பஸ்கள் ஏரலில் இருந்து குரங்கணி, ஸ்ரீவைகுண்டம் வழியாகவும், ஏரலில் இருந்து மங்கலக்குறிச்சி, பெருங்குளம் வழியாக சாயர்புரம், தூத்துக்குடிக்கு சென்ற பஸ்கள் ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர், சாயர்புரம் வழியாகவும் மாற்றிவிடப்பட்டன.

தகவலறிந்த நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் ஜெயசோபியா அறிவுறுத்தலின்படி சாலைப் பணியாளர்கள் முருகன், சுந்தர்சிங் மற்றும் திருப்பதி வெங்கடாசலம் ஆகியோர் ஜேசிபி மூலம் சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளையை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து காலை 8.15 மணியளவில் ஏரலில் இருந்து மங்கலக்குறிச்சி வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.