தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழையால் சகதியாக மாறிய மண்சாலை

 

Advertisement

ஓமலூர், மே 24: ஓமலூரில் பெய்து வரும் தொடர் மழையால், சக்கரசெட்டிப்பட்டியில் மண்சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மேலும், ஒமலூர்- தாரமங்கலம் மாநில நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். ஓமலூர் அடுத்த சக்கரசெட்டிப்பட்டி ஊராட்சி நாலுகால் பாலம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்கு பிரதான தார்சாலையில் இருந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வரை, சுமார் 500 அடி தூரம் பாதை தனியாருக்கு சொந்தமானது. சாலை அமைக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், பல ஆண்டுகலாக மண்சாலையே பயன்பாட்டில் உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால், மண்சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. சாலையில் நடந்து மற்றும் டூவீலரில் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட செல்லும் தாய்மார்கள் என அனைவரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அதே போல், ஓமலூர் இருந்து தாரமங்கலம், சங்ககிரி வழியாக திருச்செங்கோடு வரை மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மழைநீர் செல்ல முடியாததால், சாலையில் பாதி தூரம் வரை மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.

Advertisement

Related News