தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனத்துறை அலுவலகம் உள்ளே அறுந்து கிடந்த பட்டம் நூலில் காகம் சிக்கியது: பறவைகள் பாசப்போராட்டம், தீயணைப்பு துறையினர் மீட்டனர்

 

Advertisement

ஒடுகத்தூர், ஜூலை 28: ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகம் எதிரே உள்ள மரக்கிளையில் அறுந்து கிடந்த பட்டம் நூலில் சிக்கி தவித்து கொண்டிருந்த காகத்தை தீயணைப்பு துறையினர் நேற்று போராடி மீட்டனர். ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு அண்ணா நகர் வனத்துறை அலுவலகத்தின் உள்ளே ஒரு மரக்கிளையில் அறுந்து கிடந்த பட்டம் நூலில் காகம் ஒன்று சிக்கி தவித்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த மற்ற காகங்களும் பாசத்தால் கூட்டமாக அப்பகுதியை வட்டமடித்தபடி கத்தி கொண்டு சுற்றி கொண்டிருந்தது. இதனை பார்த்த வார்டு கவுன்சிலர் ஜெயந்தி வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காகத்தை மீட்க முயன்றனர். ஆனால், மரத்தின் அருகிலேயே மின்கம்பம் இருந்ததால் சற்று தாமதம் ஏற்பட்டது.

பின்னர், மின்சார துறை அதிகாரிகளிடம் தகவலை எடுத்து சொல்லி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மரத்தின் மீது ஏறி மரக்கிளையில் பட்டத்தின் நூலில் சிக்கிய காகத்தை மீட்டனர். மேலும், அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதனை பத்திரமாக பறக்க விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement