தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிரதான குடிநீர் குழாயில் விரிசல் செயற்கை நீரூற்று போல வெளியேறி வீணான குடிநீர்

 

திருப்பூர், ஜூலை 14: திருப்பூர் மாநகரில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து 2,3 மற்றும் 4வது குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பூருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பிரம்மாண்ட குழாய்கள் அமைத்து திருப்பூருக்கு கொண்டுவரப்படும் குடிநீர் இங்குள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு அந்தந்த வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்படும் குடிநீர் செயற்கை நீரூற்று போல வெளியேறி வீணாகி வருகிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நேற்று காலை முதல் குடிநீர் வெளியேறிய நொய்யலாற்றில் கலந்து வீணானது. இதுபோன்று கசிவு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை சேமிக்க குடிநீர் வாரிய அலுவலர்கள் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்தும் பழைய நிலையிலும் உள்ள குழாய்களை மாற்றி சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Related News