தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம் அருகே பரபரப்பு பிறந்து 2 நாட்களான பெண் சிசு வாய்க்காலில் சடலமாக மீட்பு  கொலை செய்த கல்நெஞ்சம் கொண்ட தாய்  போலீசார் விசாரணை

விழுப்புரம், அக். 18: விழுப்புரம் அகே பம்பை வாய்க்காலில், பிறந்து 2 நாட்களே ஆன பெண்சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு பம்மை ஆறு அணைக்கட்டுவாய்க்காலில் பெண் சிசு சடலமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் தாலுகா காவல்நிலையத்திற்கு புகார்அளித்தார். போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்து வாய்க்காலில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. தொடர்ந்து அக்குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisement

தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம்குழந்தையை வீசிகொலைசெய்தவிட்டு சென்றது யார்? என்பது குறித்தும் அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் குழந்தை பிறந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரித்தும், அருகிலுள்ள கிராமங்களிலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கள்ளக்காதலில் பிறந்ததால் தூக்கிவீசிவிட்டு சென்றாரா? அல்லது அடுத்தடுத்து பெண்குழந்தை பிறந்ததால் கல்நெஞ்சம்கொண்ட தாய் இந்த குழந்தையை வாய்க்காலில் வீசிகொலைசெய்துவிட்டு சென்றாரா? என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement