தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் * பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி, ஜூன் 29: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதனிடையே ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் நேற்று பலியான நிலையில் சாவு எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 19ம்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று வரை 145 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டன. அதில் 109 பேர் சிகிச்சையில் முன்னேற்றமடைந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டன.

Advertisement

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 100 பேர் நேற்று முன்தினம் வரை 3 கட்டங்களாக நலமுடன் வீடு திரும்பினர். மேலும் 4வது கட்டமாக நேற்று கள்ளக்குறிச்சி வஉசி நகர் ராஜா(40), சங்கராபுரம் ராஜேந்திரன்(55), பாண்டலம் கார்த்திகேயன்(44), சேஷசமுத்திரம் பாலாஜி(48), கருணாபுரம் பழனியம்மாள்(70), நல்லாத்தூர் வேல்முருகன்(49), ரோடு மாமாந்தூர் தனசேகரன்(51), தாவச்சேரி சின்னகண்ணு(60), கள்ளக்குறிச்சி காந்தி தெரு பாலகுமார்(30) உள்ளிட்ட 9 பேர் சிகிச்சையில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினர்.

இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து 109 பேர்களும், புதுவை ஜிப்மரில் 6 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 22 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இருந்து 4 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து ஒருவர், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து 2 பேர் என மொத்தம் இதுவரை 144 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷசாராய பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 64 பேர் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த கருணாபுரத்தைச் சேர்ந்த அய்யாசாமி மகன் பெரியசாமி (40) என்பவர் நேற்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 65 ஆனது. மீதமுள்ள 7 பேருக்கு தொடர்ந்து ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷ சாராயத்துக்கு அதிகபட்சமாக கருணாபுரத்தில் மட்டும் 39 பேர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக கள்ளக்குறிச்சியில் 7 மற்றும் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியில் தலா 4 பேர் இறந்துள்ளனர். தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 4 பேர்களும், சேலம் அரசு மருத்துவமனையில் 9, புதுவை ஜிப்மரில் 7 என மொத்தம் 20 நபர்கள் தொடர் சிகிச்சையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News