தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெறிநாய்கள் கடித்து குதறி 7 ஆடுகள் பலி

 

சேந்தமங்கலம், மே 30: எருமப்பட்டி அருகே, பட்டிக்குள் புகுந்து 7 ஆடுகளை கடித்துக் கொன்ற வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எருமப்பட்டி ஒன்றியம், முட்டாஞ்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (55), விவசாயி. இவர் 60க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, மாலை தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விடுவார். நேற்று முன்தினம், வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, மாலை பழைய செக்கு மரம் என்ற இடத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நள்ளிரவில் சுமார் 5க்கும் மேற்பட்ட வெறிநாய்கள், பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டியடித்தனர். உடனடியாக ரங்கராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து உள்ளே சென்று பார்த்த போது 7 ஆடுகள் வெறி நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மருத்துவ குழுவினர் நாய்கள் கடித்த ஆடுகளை பார்வையிட்டு கணக்கெடுத்து விட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related News