தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டிற்குள் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மாயம்

 

கோவை, ஜூலை 11: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கோபி (39). தனியார் நிறுவன ஊழியர். இவர், கோவை வெள்ளலூர் இவிபி காலனியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் உரிமையாளருக்கும், கோபியின் குடும்பத்தினருக்கும் வாடகை கொடுப்பதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால், கோபி குடும்பத்தினர் பொள்ளாச்சிக்கு சென்றனர். கோபி மட்டும் அடிக்கடி வாடகை வீட்டிற்கு வந்து சென்றார்.

கடந்த மே மாதம் வந்த அவர், பின்னர் கடந்த 8ம்தேதி வாடகை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடி பார்த்தும் நகை கிடைக்காததால், இதுபற்றி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

Related News