தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

6வது முறையாக அண்டார்டிகா சிகரத்தை தொட இருக்கும் வீராங்கனைக்கு எம்எல்ஏ ரூ.1 லட்சம் நிதியுதவி

செங்கல்பட்டு: 6வது முறையாக அண்டார்டிகா சிகரம் தொட இருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்து வாழ்த்து தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி(35). திருமணமான இவர் தனிப்பட்ட முறையில் மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் வெளிநாட்டு கம்பெனிகளில் பணியாற்றுபவர்களுக்கு ஜப்பான் மொழி பெயர்ப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஐரோப்பா போன்ற அனைத்து கண்டங்களில் உள்ள அனைத்து பனிமலைகளில் ஏறி உச்சத்தை தொடவேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார்.
Advertisement

அதற்கான பணிகளில் தமிழ்ச்செல்வி முழுமையாக ஈடுபட்டு வந்தார். தீவிர முயற்சியின் விளைவாக முதன்முதலாக ஆசிய கண்டத்தில் உள்ள பனி மலையில் ஏறி உச்சத்தை தொட்டார். இரண்டாவதாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள மௌண்ட் எல்ட்ரஸ், மூன்றாவதாக ஆப்பிரிக்கா கண்டம் மௌன்ட் கிலிமஞ்சாரோ மலைகளில் ஏறி சிகரத்தை அடைந்தார். அதனைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா கண்டம் மவுன்ட் அகன்ககோவா மலை, ஐந்தாவதாக ஆஸ்திரேலியா கண்டம் மவுண்ட் கெசியஸ்கோ மலை என ஐந்த கன்டங்களில் உள்ள பனி சிகரத்தின் உச்சத்தை தொட்டு தமிழ்நாட்டிற்கும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.

இதன்தொடர்ச்சியாக, முத்தமிழ்ச்செல்வி வரும் நவம்பர் மாத இறுதியில் 6வது முறையாக அண்டார்டிகா கண்டத்தில் உள்ள மிக உயரமான பனி மலையின் உச்சத்தை தொட்டு சாதனையை தொடர உள்ளார். சாதனை தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்விக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.2 லட்சம் காசோலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், முத்தமிழ்ச்செல்விக்கு ரூ.1 லட்சம் காசோலையை நேற்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். காசோலையை பெற்றுக்கொண்ட முத்தமிழ்ச்செல்வி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல், பிளாட்டினம் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த 9 மாதங்களில் 5 கண்டங்களில் ஏறி சிகரத்தை தொட்டு 6வது முறையாக அண்டார்டிகா செல்ல உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதனைப் பெண் முத்தமிழ்ச்செல்விக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Related News