தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி வயர்லஸ் சாலையில் ரூ.13.59 லட்சத்தில் புதிய 61 கண்காணிப்பு கேமரா

திருச்சி, ஏப். 25: திருட்டு, கொள்ளை, வழிப்பறி கண்காணிக்க திருச்சி வயர்லஸ் சாலையில் ரூ.13.59 லட்சம் மதிப்பீட்டில் 61 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 61வது வார்டில் உள்ள வயர்லஸ் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் டிஎஸ்என் அவன்யூ உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நடக்கும் திருட்டு சம்பவங்கள், கொள்ளை சம்பவம், வழிப்பறி, உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவதும் திருச்சி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.59 லட்சம் மதிப்பீட்டில் 61 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளது.

Advertisement

இந்த கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதமாக குடியிருப்போர் நலச்சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் தனியாக கண்காணிப்பை அறை பொருத்தப்பட்டு, முழு நேரமாக கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்த கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை கண்காணிக்கும் அறைக்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கேமரா அலுவலகத்தை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். கண்காணிப்பு கேமராவை காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் இயக்கி வைத்து பார்வையிட்டார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா துவக்க விழாவில் மண்டல தலைவர் துர்கா தேவி , உதவி ஆணையர் சண்முகம், காவல்த் துறை உதவி ஆணையர் விஜயகுமார் மற்றும் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Advertisement

Related News