தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைராபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் 600 டன் நெல் கொள்முதல்

ஈரோடு,மே30: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக ஈரோடு மண்டலத்தில், காலிங்கராயன் பாசன பகுதி விவசாயிகளிடமிருந்து வைராபாளையம் மற்றும் கணபதிபாளையம் என இரு மையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி, வைராபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் காலிங்கராயன் பாசனப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்களை டிராக்டர்கள் மூலமாக கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர், இயந்திரத்தின் மூலமாக கல், மண், தூசுகளை நீக்கி, மூட்டைகளில் பிடித்து, கொள்முதல் செய்து வருகிறனர். கடந்த 6ம் தேதி முதல் இந்தக் கொள்முதல் நடைபெற்று வருகிறது.கடந்த சில நாள்களாக மழை மற்றும் காற்று காரணமாக நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 3 நாள்களாக ஈரோடு பகுதியில் மழை இல்லாததால் நேற்று வைராபாளையம் மையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இதில், சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,450க்கும், குண்டு ரக நெல் குவிண்டால் ரூ.2,405க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. சராசரியாக நாளொன்றுக்கு 20 முதல் 40 டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி தொடங்கி தற்போது வரை சுமார் 600 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News