தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம்

செங்கல்பட்டு, ஏப்.24: செங்கல்பட்டில் சித்ரா பவுர்ணமியையொட்டி, தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பரனுர் அருகே வீராபுரம் பகுதியில் தாந்தோணியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டால் கடன் தொல்லை தீரும், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Advertisement

இந்நிலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று தாந்தோணி அம்மன் கோயில் 508 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செங்கழுநீ அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்நிகழ்வில், வீராபுரம் மகேந்திரா சிட்டி பரனுர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் மாரிமேல்கட்டம்மன் கோயிலின், 12ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள், பஜார் வீதியில் உள்ள முத்து பிள்ளையார் கோயிலிருந்து 501 பால்குடங்களுடன் நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க, தாரை தப்பட்டை வாதியங்களுடன், வாணவேடிக்கைகள் ஒலிக்க பஜார் வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர். பின்னர், மாரிமேல்கட்டம்மனுக்கு பக்தர்கள் வரிசையில் நின்றபடி, தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்தனர். இதில், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் மாரிமேல்கட்டம்மன் கோயிலின், 12ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள், பஜார் வீதியில் உள்ள முத்து பிள்ளையார் கோயிலிருந்து 501 பால்குடங்களுடன் நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க, தாரை தப்பட்டை வாதியங்களுடன், வாணவேடிக்கைகள் ஒலிக்க பஜார் வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர். பின்னர், மாரிமேல்கட்டம்மனுக்கு பக்தர்கள் வரிசையில் நின்றபடி, தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்தனர். இதில், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement