தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதுச்சேரியில் 2 நாட்களாக நடந்த சாகர் கவாச் ஒத்திகையில் 5 பேர் சிக்கினர்

 

புதுச்சேரி, ஜூன் 27: புதுச்சேரியில் கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில் 2 நாட்கள் நடத்தப்பட்ட சாகர் கவாச் ஒத்திகையின்போது தீவிரவாதிகள் போல் சாதாரண உடையணிந்து ஊடுருவ முயன்ற 5 பேரை போலீசார் பிடித்தனர்.நாடு முழுவதும் கடலோர மாவட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலோரப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், அரசு கட்டிடங்கள், கலங்கரை விளக்கம், சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் சாகர் கவாச் என்கிற கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 2 நாள் நடைபெற்றது.

இதேபோல் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 24ம் தேதி சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிஐஜி சத்தியசுந்தரம் தலைமையில் சீனியர் எஸ்.பி. (சட்டம் ஒழுங்கு) கலைவாணன், கடலோர காவல்படை எஸ்.பி. பழனிவேல் மற்றும் போலீசார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். மேலும், புதுச்சேரி மீனவ கிராமங்களான கனகசெட்டிகுளம், பிள்ளைச்சாவடி, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், பூரணாங்குப்பம், நல்லவாடு, மூர்த்திகுப்பம் உள்ளிட்ட கரையோர மீனவ கிராமங்களில் சோதனை நடந்தது. மேலும் மக்கள் கூடும் இடங்களான புதிய பேருந்து நிலையம், மார்க்கெட், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சியில் காவலர்கள் கலந்து கொண்டனர். 2 நாட்களாக நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் ஊடுருவ முயன்ற 5 பேரை போலீசார் பிடித்தனர். கடந்த 24ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய ஒத்திகை நிகழ்ச்சி நேற்றிரவு 8 மணியுடன் நிறைவு அடைந்தது.

Related News