தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் இருந்து வேலூருக்கு கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் பைக்குகளுடன் 4 பேர் கைது

வேலூர், ஜூன் 19: ஆந்திராவில் இருந்து வேலூருக்கு பைக்கில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைப்பற்றி 4 பேரை கைது செய்தனர். வேலூர் எஸ்பி மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் காட்பாடி அடுத்த உள்ளிப்புதூர் ரோட்டில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை 8.30 மணியளவில் அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனையிட்டனர். சோதனையில் 2 பைக்குகளிலும் வந்தவர்களிடம் இருந்த பைகளில் சோதனையிட்டபோது, அதில் தலா 2.5 கிலோ வீதம் மொத்தம் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ₹50 ஆயிரமாகும்.

Advertisement

இதையடுத்து பைக்குகளுடன் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 4 பேரையும் பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள், வேலூர் அடுத்த பொய்கை சத்தியமங்கலத்தை சேர்ந்த நெடுஞ்செழியன்(24), பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி கழனிப்பாக்கத்தை சேர்ந்த விஜய்(33), வேப்பங்கால் ராமாபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(25), திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்த ரிஷிகுமார்(20) என்பது தெரிய வந்தது. இவர்கள் கஞ்சாவை ஆந்திர மாநிலம் குடிபாலா அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து வாங்கி வந்து வேலூர், திருப்பூர், கோவை என பல்வேறு இடங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News