தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் விபத்தில் 5 பேர் காயம் வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில்

வேலூர், ஜூலை 1: வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் 5 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன்(58), இவர் தனது மகன், பேரன் உட்பட குடும்பத்தினர் 5 பேருடன் சொந்த ஊரில் இருந்து திருப்பதிக்கு காரில் சென்றார். திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று காலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, விரிஞ்சிபுரம் காவல் நிலையம் எதிரே நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. காரில் பயணித்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று காரில் இருந்தவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Related News