தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4 ஆயிரம் பொம்மைகளுடன் நவராத்திரி கொலு கண்காட்சி

பெரம்பூர்: கொளத்தூர் நவராத்திரி கோயிலில் 4 ஆயிரம் பொம்மைகளுடன் நவராத்திரி கொலு கன்காட்சி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீடு மற்றும் கோயில்களில் விதவிதமான பொம்மைகளை வைத்து கொலு கண்காட்சி நடத்துவது வழக்கம். அந்த வகையில் கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 36வது தெருவில் உள்ள நவராத்திரி கோயிலில் ஆண்டுதோறும் எண்ணற்ற பொம்மைகளை வைத்து கொலு கண்காட்சி நடத்துவது வழக்கம்.
Advertisement

அதன்படி, இந்த ஆண்டு 10வது ஆண்டாக நவராத்திரி கொலு கண்காட்சி திருவிழா நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய 3 தேவிகளும் ஒரே கருவறையில் இருப்பது கோயிலில் சிறப்பு. இங்கு நவராத்திரி கொலுவை முன்னிட்டு 4,000க்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. கடவுள்களின் உருவங்கள், தமிழர்களின் கலாச்சாரம், ஆன்மிகத்தின் மகத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பறைசாற்றும் விதத்தில் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சரவணப் பொய்கை முருகன் நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில் கார்த்திகை பெண்கள் சுற்றி இருப்பது போலவும் சிவன் நெற்றியில் இருந்து தண்ணீர் வருவது போல பல்வேறு காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி திருவிழாக்களின் போது இதுபோன்ற கொலு கண்காட்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வந்து நமது முந்தைய கலாச்சாரம், ஆன்மிகம் குறித்த நிகழ்வுகள் மற்றும் வரலாற்று சுவடுகளை வருங்கால சந்ததியினருக்கு பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் பிரமாண்டமான கொலு கண்காட்சியை நடத்துவதாகவும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கொலு கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தி வரும் கஜேந்திரன் தெரிவித்தார்.

Advertisement