தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயங்கொண்டத்தில் பாமக.வினர் 47 பேர் கைது பரபரப்பு

ஜெயங்கொண்டம், ஜுன் 2: ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து, தமிழ்மறவன் தலைமையிலான பாமகவினர் 47 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

பாமகவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அணி, அன்புமணி ராமதாஸ் அணி என 2 அணிகளாக சுறுசுறுப்பாக செயல் பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியில் 16 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 4 மாவட்ட தலைவர்களை மாற்றி புதிய பொறுப்பாளர்களை நியமித்து டாக்டர் ராமதாஸ் உத்தரவுகளை வழங்கினார். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் தற்போது டாக்டர் ராமதாசால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த காடுவெட்டி ரவியை மீண்டும் மாவட்ட செயலாளராக நியமித்த நிலையில் தற்போது ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் காடுவெட்டி ரவி தலைமையில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

அதில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் அன்புமணி ராமதாசால் நியமிக்கப்பட்ட அரியலூர் பாமக மாவட்ட செயலாளர் தமிழ்மறவன், மற்றும் மாநில அமைப்பு தலைவர் டிஎம்டி திருமாவளவன் ஆகியோர் தலைமையிலான பாமகவினர் ஜெயங்கொண்டம் நகரத்தில் அன்புமணி ராமதாசால் நியமிக்கப்பட்ட நகர செயலாளர் மாதவன் தேவா முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு கலந்து கொள்ள முயற்சித்தனர்.

அப்போது பாதுகாப்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி 47பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News