தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திறனாய்வு தேர்வில் 46 மாணவர்கள் தேர்ச்சி

 

Advertisement

தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வில் 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 5வது இடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு, உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை அரசுத்தேர்வுகள் இயக்ககம் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வை, கடந்த ஜனவரி 25ம் தேதி நடத்தியது. 1 லட்சத்து 43 ஆயிரத்து 351 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.

இத்தேர்வில் 1000 மாணவ, மாணவிகள் (500 மாணவர்கள், 500 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை, மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ரூ.10ஆயிரம் வழங்கப்படும். இத்தேர்வின் முடிவுகள் கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில், 4536 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 29 மாணவர்கள், 17 மாணவிகள் என மொத்தம் 46 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வு தேர்ச்சி சதவீதத்தில், தமிழகத்தில் 5 இடத்தில் தர்மபுரி மாவட்டம் இடம் பிடித்துள்ளது. பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பாராட்டினார்.

Advertisement

Related News