தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

பெரும்புதூர்: பெரும்புதூரில் கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளது. இங்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, போன்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி விடுதியில் 160க்கும் அதிகமான மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த, விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு வழக்கம்போல மதிய உணவு வழங்கபட்டுள்ளது. அதனை சாப்பிட்ட மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றுள்ளனர்.

Advertisement

அப்போது திடீரென மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 43 மாணவர்களுக்கும் அடுத்தடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் பாதிப்படைந்த மாணவர்கள் அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த, பெரும்புதூர் போலீசார், கல்லூரி நிர்வாகத்திடம் நடத்திய விசாரணையில் 3 மூன்று அடுக்குமாடுகளில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவருக்கும் ஒரே உணவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு அடுக்கு மாடியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பருகிய மாணவர்களுக்கு மட்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News