தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உசிலம்பட்டி அருகே 40 மூடை ரேஷன் அரிசி கடத்தல்: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

 

உசிலம்பட்டி ஜூலை 5: உசிலம்பட்டி அருகே 40 மூடை ரேஷன் அரிசி கடத்திச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இருந்து அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, இந்த ரேஷன் டையிலிருந்து வேன் மூலம் 40 மூடை ரேசன் அரிசியை மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்றனர். அப்போது அங்க வசிக்கும் இளைஞர்கள் அவர்களின் வாகனத்தை மடக்கிப்பிடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரேஷன் அரிசி கடத்தல் குறித்து போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் இளைஞர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் கடத்தலில் ஈடுபட்டோர் அரிசி வைக்கப்பட்ட வாகனத்துடன் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் இளைஞர்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகள் அடிப்படையில், ரேஷன் அரிசி கடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கடத்தல் தொடர்பாக விஏஓ ராமகிருஷ்ணன் அளித்த புகார் அடிப்படையில் உசிலம்பட்டி தாலுகா விநியோக அதிகாரி மயிலேறிநாதன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அய்யனார்குளம் ரேஷன் கடை விற்பனையாளர் கிருஷ்ணன் மற்றும் எடையாளர் இளையராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News