தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயியின் டூவீலரிலிருந்து 4 பவுன், ₹57 ஆயிரம் திருட்டு

கெங்கவல்லி, மே 16: வீரகனூரில் விவசாயி டூவீலரிலிருந்து 4 பவுன் நகை, ₹57 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜ்மோகன்(50). இவர் வீரகனூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ள தனது மனைவியின் 4 பவுன் தங்க வளையலை மீட்பதற்காக தனது டூவீலரில் வீரகனூர் வந்தார். பைனான்ஸ் நிறுவனத்தில் நகையை மீட்டு தனது டூவீலர் பெட்டியில் வைத்து விட்டு, வீரகனூர் சந்தைப்பேட்டை அருகில் டூவீலரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடையில் ஜூஸ் குடிக்க சென்றார்.

Advertisement

பின்னர் திரும்பி வந்தபோது டூவீலரில் இருந்த பெட்டி திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், டூவீலர் பெட்டியில் வைத்திருந்த 4 பவுன் தங்க வளையல், ரூ.57 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டதை பார்த்து ராஜமோகன் கூச்சலிட்டார். இதுகுறித்து வீரகனூர் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் விவசாயியின் டூவீலரிலிருந்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News