தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநத்தம் அருகே மேம்பால தடுப்புக் கட்டையில் மோதி தீப்பிடித்து எரிந்த கார் வங்கி மேலாளர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்

திட்டக்குடி, ஏப். 18: ராமநத்தம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணம் செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (36). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தன்னுடன் பணிபுரியும் கேசவன் (27), சசிகுமார் (25), அருண்குமார் (23) உள்ளிட்டோருடன் தனது காரில் திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

Advertisement

ராமநத்தத்தை அடுத்த ஆவட்டி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புக் கட்டையின் மீது மோதியது. இதில் கார் திடீரென தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் காரில் இருந்த 4 பேரும் அலறியடித்துக் கொண்டு உடனடியாக காரில் இருந்து வெளியேறினர். இதுபற்றி உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராமநத்தம் போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர். இதனால் அரைமணி நேரம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News