தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனத்துறை பகுதியில் மணல் அள்ளிய 4 பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் வனத்துறைக்கு சொந்தமான சத்தியவாடி காப்புக்காடு, மோசட்டை சரகம் வெள்ளாற்று பகுதியில் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனவர்கள் சிவகுமார், பன்னீர்செல்வம், வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுத பிரியன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement

தொடர்ந்து மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களான அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, ஓலையூர் கிராமத்தை சேர்ந்த தங்கப்பிள்ளை மகன் ஆசைத்தம்பி(43), தாவிடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் வேல்முருகன்(50), ராமச்சந்திரன் மகன் சின்னையன்(40), விருத்தாசலம் தாலுகா வண்ணான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்காமன் மகன் சின்னராசு(32) ஆகிய நான்கு பேரையும் வனச்சரக அலுவலகம் கொண்டு சென்று தமிழ்நாடு வனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் மாவட்ட வனத்துறைக்கு பரிந்துரை செய்ததின்பேரில் ஆசைத்தம்பி, சின்னராசு ஆகிய இருவருக்கும் தலா 35 ஆயிரம் ரூபாயும், வேல்முருகன், சின்னையன் ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Related News