தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணி பகுதிகளில் கடைகள், வீடுகளில் போதை பொருட்கள் பதுக்கி விற்பனை 4 பேர் அதிரடி கைது பெங்களூர், ஆந்திராவில் இருந்து கடத்தல்

ஆரணி, ஏப். 27: ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வடக்கு மண்டல ஐஜி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஐஜி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம், குண்ணத்தூர், சேவூர், சாணார்ப்பாளையம், அக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பங்க் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த கிராமங்களில் உள்ள பங்க் கடைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து, விசாரணையில், ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சங்கர்(42) என்பதும், இவருக்கு பெங்களூர், ஆந்திராவில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வந்து ஆரணி சுற்றுவட்டார பங்க்கடைகளுக்கு விற்பனை செய்து வந்த குண்ணத்தூரை சேர்ந்த யுவராஜ்(24), சாணார்ப்பாளையம், வெங்கடேசன் (65), ராஜாதேசிங்கு(44), என்பது தெரியவந்தது. தொடர்ந்து, தனிப்படை போலீசார் அவர்களின் மளிகை கடை, வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் நான்குபேரை பிடித்து ஆரணி தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, தாலுகா போலீஸ் எஸ்ஐ அருண்குமார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் நேற்று கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News