தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கஞ்சா விற்ற 4 பேர் கைது

 

ஈரோடு, ஜூலை 7: ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஈரோடு மரப்பாலம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலம், சுபமபூர் கொட்ச மலை பகுதியை சேர்ந்த தீபராஜ் தாபா (22), என்பதும், தற்போது ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. அவரை சோதனையிட்டதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த ரூ.900 மதிப்பிலான 90 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதே போல, ஈரோடு வடக்கு போலீசார் கனிராவுத்தர்குளம், காந்தி நகர், முள்புதர் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரியசேமூர், மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சூர்யா (25), மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.1,500 மதிப்பிலான 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தெற்கு போலீசார், மேற்கொண்ட சோதனையில், சென்னிமலை ரோடு, ரயில்வே கூட்ஷெட் அருகில் கஞ்சா விற்ற ரங்கம்பாளையத்தை சேர்ந்த மனோ (24), என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related News