தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்திரையில்லா தராசு பயன்பாடு 36 நிறுவனங்களுக்கு அபராதம்

சிவகங்கை, ஜூன் 3: முத்திரையிடப்படாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை பயன்படுத்திய 36 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் ஆணைய உத்தரவின்படி, சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தலைமையில், அலுவலர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்களில் சட்டமுறை எடையளவுச்சட்டம் மற்றும் அதன் விதிகளின் கீழ் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.

Advertisement

இதில் மறு முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள் 5, மறுமுத்திரையிடப்படாத சோதனை எடைகற்கள் 6, தரப்படுத்தப்படாத எடையளவுகள் 3 என மொத்தம் 14 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.மறுபரிசீலனை சான்றினை காட்சிக்கு வைக்காத நிறுவனங்கள் 9 மற்றும் சோதனை எடைகற்கள் பராமரிக்காத நிறுவனங்கள் 13 என மொத்தம் 36 நிறுவனங்கள் மீது சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.

எவ்வித சான்றுரைகளும் இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த 3 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.

எனவே, எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னணு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரையிட்டும், அதன் சான்றிதழை வைத்திருக்கவும் வேண்டும். பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், நிகர எடை, அதிகபட்ச சில்லரை விலை, தயாரிப்பாளரின் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News