தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோலட்டி சக்தி மாரியம்மன் கோயில் 35-ம் ஆண்டு சித்திரை திருவிழா

 

Advertisement

மஞ்சூர், ஏப்.28: மஞ்சூர் அருகே கோலட்டியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயில் 35 ம் ஆண்டு சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கோலட்டியில், சக்தி மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த கோயிலில் 35ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி காப்புக்கட்டு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதை தொடர்ந்து புலிசோலை ஆற்றில் இருந்து கரகம் பாலிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா சென்றார். உடன் ஏராளமான பக்தர்கள் மாவிளக்குகளை ஏந்தி ஓம் சக்தி, பராசக்தி’ என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

இதை தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்களுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதில் கோலட்டி தாய்சோலை, தொட்டக்கம்பை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

Advertisement

Related News